Friday, 6 November 2015

இயற்கைப் புடலை...

இயற்கைப் புடலை...
1 ஏக்கர், 150 நாள், ரூ.1 லட்சம்பந்தலில் காய்க்கும் பணம்!இ.கார்த்திகேயன், படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்.
குறைவான வேலையாட்கள், எளிதான பறிப்பு ஆகிய காரணங்களால்தால்தான் சமீபகாலமாக விவசாயிகளின் பார்வை, பந்தல் காய்கறிகள் பக்கம் திரும்பியுள்ளது. வெள்ளரி, பாகல், புடலை, பீர்க்கன் போன்ற காய்கறிகள் பந்தல் முறையில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. அப்படி சாகுபடி செய்யும் பலரும் இயற்கை முறையில் இக்காய்கறிகளை உற்பத்தி செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட இயற்கை காய்கறி சாகுபடியாளர்களை அவ்வப்போது அடையாளம் காட்டி வருகிறது, 'பசுமை விகடன்’. அந்த வரிசையில் தன்னையும் இணைத்துக் கொள்கிறார், விருதுநகர் மாவட்டம், அச்சம்தவிழ்த்தான் கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன். இவர், பந்தல் அமைத்து புடலை சாகுபடி செய்து வருகிறார். 
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது, அச்சம்தவிழ்த்தான். ஊருக்குள் நுழைந்தவுடனேயே பச்சைப் பசேலென படர்ந்திருக்கும் பந்தல், ராதாகிருஷ்ணனின் தோட்டத்தை அடையாளம் காட்டி விடுகிறது. கொடிகளில் தொங்கிக் கொண்டிருந்த புடலங்காய்களைப் பறித்துக் கொண்டிருந்த ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்.
'நான் பத்தாம் வகுப்பு வரை படிச்சிருக்கேன். பூர்வீக விவசாயக் குடும்பம்தான். எல்லாருமே தாராளமா ரசாயனம் தூவி மகசூல் எடுத்தவங்க. அப்பா காலத்துல மிளகாய், பருத்தி, கத்திரியைத்தான் அதிகம் சாகுபடி செஞ்சாங்க. நானும் அப்பா கூட ரசாயன முறையிலதான் விவசாயம் செய்தேன். என்னதான் உரம் போட்டாலும், பூச்சிக்கொல்லி தெளிச்சாலும் நோய்கள் கட்டுப்படலை. அதுக்கேத்தாப்புல வேலையாட்களும் கிடைக்கலை. கிடைச்சாலும் கூலி அதிகமா கேட்டாங்க. போதுமான விளைச்சலும் இல்லை. என்ன செய்யலாம்னு யோசனையில இருந்தப்பத்தான்... ஒரு நண்பர், இயற்கை விவசாயத்தைப் பத்தி சொல்லி, பசுமை விகடனை எனக்கு அறிமுகப்படுத்தினார். அந்த நேரத்துல வில்லிபுத்தூருக்கு நம்மாழ்வார் ஐயா வந்திருந்தாங்க. அந்தக்கூட்டத்துல கலந்துக்கிட்டேன். அங்கதான், இயற்கை விவசாயத்துனால மண்ணுக்கு, விவசாயத்துக்குக் கிடைக்கிற நன்மைகளைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். வீட்டுக்கு வந்ததும், அப்பாகிட்ட சொன்னேன். 'இயற்கை இயற்கைனு சொல்லுவாங்க. ஆனா, மகசூல் வராது. ரசாயன விவசாயம்தான் நல்லது’னு இயற்கை விவசாயத்து மேல நம்பிக்கை இல்லாமப் பேசினார், அப்பா.
ஆனாலும், நான் விடுல. இயற்கை விவசாயத்துல ஏதாவது சாகுபடி செஞ்சு மகசூல் எடுத்துக் காட்டணும்னு முடிவு செஞ்சு... முதல் கட்டமா ரெண்டு ஏக்கர்ல டீலக்ஸ் பொன்னி விதைச்சேன். ஏக்கருக்கு 42 மூட்டை வீதம் 2 ஏக்கர்ல மொத்தம் 84 மூட்டை விளைச்சல் கிடைச்சது. அது, ரசாயனத்துக்கு இணையான மகசூல்தான். இயற்கையில விளைவிக்கிறப்போ நாத்து வளர்ச்சி, நெல் மணிகள் எல்லாத்துலயும் நல்ல வித்தியாசம் தெரிஞ்சுது. அரிசியின் சுவையும் வித்தியாசமா இருந்துச்சு. அடுத்ததா, நாட்டுக்கத்திரியை இயற்கை முறையில 2 ஏக்கர்ல சாகுபடி பண்ணினேன். வீரியமான ரசாயனப் பூச்சிக்கொல்லி அடிச்சாலே கட்டுப்படாத பூச்சிகள் கூட...  இஞ்சிபூண்டுக் கரைசல், வேப்பெண்ணெய் ஸ்பிரே பண்ணுனதுல கட்டுப்பட்டுச்சு. காய்களும் திரட்சியா காய்ச்சுச்சு. மகசூலும் நல்லா இருந்துச்சு. அதுக்கப்பறம்தான் எங்க வீட்டுலயே இயற்கை விவசாயம் மேல நம்பிக்கை வந்துச்சு. அதுல இருந்து இயற்கை விவசாயம்தான் செய்றேன்' என்று முன்கதை கூறிய ராதாகிருஷ்ணன், தொடர்ந்தார்.
'கத்திரியில நல்லா மகசூல் கிடைச்சாலும், தினப்பறிப்புக்கு கூலி ஆள் கிடைக்கலை. அதனால, கத்திரியை விட்டுட்டு, வேற என்ன பயிர் சாகுபடி செய்யலாம்னு தேடுதலை ஆரம்பிச்சேன். அந்த சமயத்துல, (இரண்டு ஆண்டுகளுக்கு முன்) ஹைதராபாத்ல இருக்கிற சொந்தக்காரர் தோட்டத்துக்குப் போக வேண்டியிருந்துச்சு. அங்க, அவர் பந்தல் அமைச்சு புடலை சாகுபடி பண்ணிக்கிட்டு இருந்தார். தோட்டம் முழுக்க கொடி படர்ந்து தோரணம் கட்டுனது மாதிரி புடலங்காய் காய்ச்சுத் தொங்கிக்கிட்டிருந்ததைப் பார்க்கும்போதே, அடுத்ததா புடலைதான் போடணும்னு மனசுல நினைச்சுக்கிட்டேன். ஊருக்கு வந்ததும் அதுக்கான வேலைகளை ஆரம்பிச்சிட்டேன். முன் அனுபவம் இல்லாததால கொஞ்சம் தயக்கம் இருந்துச்சு. ஆனாலும், முதல் அறுவடையிலேயே நல்ல மகசூல். இப்போ ரெண்டு வருஷமா புடலை சாகுபடி செய்துக்கிட்டு இருக்கேன். ஒரு ஏக்கர் புடலை இப்போ அறுவடையில இருக்கு. ஒரு ஏக்கர்ல இன்னும் கொஞ்சம் நாள்ல அறுவடை பண்ணலாம்' என்ற ராமகிருஷ்ணன், மகசூல் மற்றும் வருமானம் பற்றிச் சொன்னார்.
45 பறிப்புகள்... 11,250 கிலோ!
'புடலையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் காய் பறிக்கிறேன். காலையில 6 மணியில இருந்து 8 மணிக்குள்ள பறிப்பு முடிஞ்சிடும். பந்தல் முறைங்கிறதுனால, காய்கள் பார்வைக்கு நல்லா தென்படும். ஒரு ஏக்கர் பறிக்க ரெண்டு ஆள் போதும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒரு பறிப்புனு 45 பறிப்புல இருந்து 50 பறிப்புகள் வரை பறிக்கலாம். ஒரு பறிப்புக்கு 250 கிலோவுல இருந்து 300 கிலோ வரை காய் கிடைக்கும். சிலசமயம் அதுக்கு அதிகமாவும் கிடைக்கும். சராசரியா 45 பறிப்பு, ஒரு பறிப்புக்கு 250 கிலோனு வெச்சுக்கிட்டாலே... மொத்தம் 11 ஆயிரத்து 250 கிலோ புடலங்காய் கிடைக்குது. ஒரு கிலோ 12 ரூபாய்ல இருந்து 18 ரூபாய் வரை விற்பனையாகுது.
இயற்கை முறை புடலைனு தனியால்லாம் விற்பனைக்கு அனுப்புறதில்லை. காய்கறி மார்கெட்டுக்குத்தான் அனுப்புறேன். ஆனா, மத்தவங்க கொண்டு வர்ற புடலையை விட என்னோட புடலை நீளமாவும், தரமாவும் இருக்கிறதால மத்தவங்களுக்குக் கொடுக்கிற விலையை விட கிலோவுக்கு 3 ரூபா வரை கூடுதல் விலை கொடுக்கிறாங்க, வியாபாரிகள். குறைஞ்சபட்சமா கிலோ 12 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலே 11 ஆயிரத்து 250 கிலோவுக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல செலவெல்லாம் போக 1 லட்ச ரூபாய்க்கு மேல லாபம் கிடைச்சிடும்' என்ற ராமகிருஷ்ணன்,
'காய்கறிகள்ல எப்பவுமே பந்தல் காய்கறிகளுக்கு நிலையான மார்க்கெட்டும் கட்டுப்படியான விலையும் இருக்குது. அதனால, எப்பவும் பந்தல் காய்கறி விவசாயிகளைக் கைவிடாது. மரம், இரும்பு, கல்னு பல முறையில் பந்தல் அமைக்கலாம். ஆனா, கல்தூண் அமைச்சிட்டா ரொம்ப வருஷம் தாக்குப்பிடிக்கும். பந்தல் அமைக்கிறதுக்கான ஆரம்பகட்ட செலவுகளைப் பார்த்து மலைக்காம இருந்தா, தொடர்ந்து பல வருஷங்களுக்கு லாபம் பார்க்க முடியும்' என்று ஆலோசனை சொன்னார்.
தொடர்புக்கு,
ராதாகிருஷ்ணன்,
செல்போன்: 9486588859. 

சாகுபடிப்பாடம்!
ஒரு ஏக்கர் பரப்பில் பந்தல் அமைத்து புடலை சாகுபடி செய்யும் விதம் குறித்து ராதாகிருஷ்ணன் சொன்ன விஷயங்கள், பாடமாக இங்கே...
ஏக்கருக்கு 180 கல்தூண்கள்!
பந்தல் காய்கறிகளுக்குப் பட்டம் கிடையாது. அனைத்துப் பட்டங்களிலும் சாகுபடி செய்யலாம். புடலை 150 நாள் பயிர். தேர்வு செய்த நிலத்தில், 15 அடி இடைவெளியில் 10 அடி உயரமுள்ள கல்தூண்களை ஓர் அடி ஆழத்துக்குக் குழிபறித்து ஊன்ற வேண்டும். ஏக்கருக்கு 180 கல்தூண்கள் தேவைப்படும். பிறகு, கம்பி கொண்டு பந்தல் அமைத்து... 4 டிராக்டர் மட்கிய குப்பையைக் கொட்டி மினி டிராக்டர் மூலம் உழவு செய்து ஒரு வாரம் காய விட வேண்டும். பிறகு, ஓர் உழவு செய்து சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, வரிசைக்கு வரிசை 15 அடி இடைவெளி விட்டு ஒவ்வொரு வரிசையிலும் 2 அடி இடைவெளியில் கையால் குழி பறிக்க வேண்டும். ஒரு குழிக்கு ஒரு விதை வீதம் விதைநேர்த்தி செய்த புடலை விதைகளை விதைத்து மண் கொண்டு மூடி பாசனம் செய்ய வேண்டும். ஏக்கருக்கு 300 கிராம் விதை தேவைப்படும்.
விதைத்த மறுநாள் ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். தொடர்ந்து மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து பாசனம் செய்ய வேண்டும். 5ம் நாள் முதல் 10ம் நாளுக்குள் தளிர் எட்டிப் பார்க்கும். 15ம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா, 20 மில்லி மீன் அமினோ அமிலம் என்ற கணக்கில் கலந்து தோட்டம் முழுவதும் தெளிக்க வேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்கு ஒரு முறை இது போல தெளிக்க வேண்டும்.  
18ம் நாள் முதல் 20ம் நாளுக்குள் கொடி படரும். கொடி படர்ந்ததும், கொடிமுனையில் கயிறு கட்டி கயிற்றின் மறு முனையைப் பந்தலில் கட்ட வேண்டும். 35ம் நாளுக்குள் கொடி வளர்ந்து பந்தலை அடைந்து விடும்.
40ம் நாளுக்கு மேல் பூக்கத்தொடங்கும். 50ம் நாளுக்கு மேல் காய்கள் தென்படும். 60ம் நாளில் இருந்து காய் பறிக்கத் தொடங்கலாம். 75ம் நாளுக்கு மேல் அதிகளவில் காய்கள் காய்க்கும். 150ம் நாள் வரை காய் பறிக்கலாம்.
20, 40, 60 மற்றும் 80ம் நாட்களில் களை எடுக்க வேண்டும். ஒவ்வொரு முறை களை எடுக்கும்போதும்... 20 கிலோ கடலைப் பிண்ணாக்கு, 20 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, 20 கிலோ மண்புழு உரம் ஆகியவற்றைக் கலந்த கலவையில் ஒரு கைப்பிடி அளவு எடுத்து, ஒவ்வொரு செடியின் தூரிலும் வைக்க வேண்டும்.

ஒரே சந்தையை நம்பக்கூடாது!  
'ராஜபாளையம், வில்லிபுத்தூர், சிவகாசினு மூணு ஊரு சந்தைகளுக்கும் நான் காய் அனுப்புறேன். எப்பவுமே ஒரே சந்தையை மட்டும் நம்பி இருக்கக்கூடாது. ஒரே சந்தையில மொத்தக் காயையும் விற்கும்போது விலையைக் குறைச்சிடுவாங்க. 'இதுதான் விலை... இல்லை வேண்டாம்னா எடுத்துக்கிட்டுப் போங்க’னு ஈஸியா சொல்லிடுவாங்க. காய்களைப் பறிச்சு மூட்டைக் கட்டி, அவ்வளவு தூரம் கொண்டு போய் விலைக்குப் போடும்போது, வியாபாரி வேண்டாம்னு சொன்னா அவ்வளவு கஷ்டமா இருக்கும். அதனால எப்பவுமே, குறைஞ்சது இரண்டு சந்தைகளையாவது கையில வச்சிருக்கணும். அப்பத்தான் ஒரு சந்தையில விலை இல்லாட்டாலும், இன்னொரு சந்தையில விலை கிடைக்கும். விலையில ஏற்றம் இறக்கம் இருந்தாலும் நஷ்டம் வராது' என்கிறார், ராதாகிருஷ்ணன்.

முயல்கள், எலிகள் தொல்லைக்கு கூமுட்டைக் கரைசல்!    
'இந்தப் பகுதிகளில் முயல் தொல்லை அதிகம். புடலை விதை ஊன்றிய அன்றே குழியைத் தோண்டி விதையை எடுத்துவிடும். தப்பிச்சு வர்ற கொடிகளை தண்டுப்பகுதியில் கடிச்சி விட்டுடும். ரெண்டு அழுகின முட்டையை (கூமுட்டை) உடைச்சு 10 லிட்டர் தண்ணீரில் கலக்கி, வாரம் ஒரு முறை கொடியைச் சுற்றி தெளிச்சு விட்டா போதும். தோட்டத்துப் பக்கம் முயல் எட்டி கூடப் பார்க்காது. எலி, பெருச்சாளி தொல்லைக்கும் இதைச் செய்யலாம்' என்கிறார், ராதாகிருஷ்ணன்.

சிவப்பு வண்டுத் தாக்குதலுக்கு இஞ்சிபூண்டுக் கரைசல்!  
கொடி படர ஆரம்பித்தவுடன் சிவப்பு வண்டுகள் தாக்கலாம். இலை அல்லது தண்டுகளில் ஒரு சிவப்பு வண்டு தென்பட்டாலும், உடனே பூச்சிவிரட்டி தெளிக்க வேண்டும். 250 கிராம் இஞ்சி, 250 கிராம் பூண்டு ஆகியவற்றை அரைத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்துகொள்ள வேண்டும். இக்கலவையிலிருந்து 100 மில்லி எடுத்து, 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

புடலங்காயின் பயன்கள்!  
புடலங்காய் நம் உடலிலுள்ள நச்சுகளை அழித்து வெளியேற்றுகிறது. தண்ணீர்ச்சத்து அதிகமாக இருப்பதால், உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுவதோடு, உடலிலுள்ள தேவையற்ற உப்பு நீரை, வியர்வை மற்றும் சிறுநீர் மூலம் வெளியேற்றி விடும் தன்மை கொண்டிருக்கிறது. புடலை இலைச்சாறுடன், கொத்தமல்லித்தழை சேர்த்து கொதிக்க வைத்த தன்ணீரை தினமும் 3 வேளை குடித்து வந்தால் மஞ்சள்காமாலை கட்டுக்குள் வரும். புடலங்காயில் வைட்டமின் ஏ, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் சுண்ணாம்பு ஆகிய சத்துக்கள் இருப்பதால் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உகந்தது. பிஞ்சு அல்லது நடுத்தர காயைத்தான் சாப்பிட வேண்டும்.

பூஞ்சண நோயைக் கட்டுப்படுத்தும் விதைநேர்த்தி!
100 மில்லி பஞ்சகவ்யாவை, 300 மில்லி தண்ணீரில் கலந்து, அதில் புடலை விதைகளை ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் விதைகளை எடுத்து, அவற்றின் மீது, 20 கிராம் அசோஸ்பைரில்லம், 20 கிராம் பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றைக் கலந்து தூவி அரை மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும். இவ்வாறு விதை நேர்த்தி செய்தால், பூஞ்சண நோய் வராது.

Thursday, 8 October 2015

உயிர்பான உயிர்வேலி

*வானகம் இதழில்* (வெற்றிமாறன்.இரா) நான் எழுதிய உயிர்வேலி கட்டுரை..
》》 நண்பர்களே.. இயற்கை வழி வேளாண்மையின் உயிர்நாடியான உயிர்வேலி அமைப்பதற்கான தக்க காலம் இது , பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
* உயிர்பான உயிர்வேலி *
வருமுன் காப்போம் என்கிற நம் முன்னோர்களுடைய ஞான கருத்தை ஏற்று வருகிற மழைக் காலத்தில் கிடைக்கும் உயிர் நீரான மழை நீரால் பலனடைய சில முன் நடவடிக்கைகளைப் மேற்கொள்வோம். அவைகளில் சிலவற்றைப் பார்ப்போம்.
வேலியே பயிரை மேயலாமா? என்பது முதுமொழி ஆனால் வேலியே விவசாயினுடைய பொருளாதாரத்தை மேய்கிறது என்பது புதுமொழியாக உருவாகி வருகிறது. ஐயா நம்மாழ்வார் அவர்கள் இயற்கை வழி விவசாயத்தின் பயன்களை உணர்ந்து ஆர்வமாய் இணைபவர்களுக்கு முதலில் கூறுவது செலவில்லாத வேளாண்முறை யுத்திகளை கையாள வேண்டும் என்பதுதான். இன்று இயற்கைவழி விவசாயம் செய்ய விரும்பும் பெரும்பாலோனோருக்கு பெரும் பொருளாதார விரையத்தைக் கூட்டுவதில் முதன்மையானது வேலி அமைக்கும் முறை. விவசாயத்தின் தொடக்கத்திலேயே பெரும் பொருளாதாரத்தை முடக்குவது செயற்கையான முறையில் அமைக்கப்படும் கம்பிவேலிகள் தான். எனவே, விவசாயிகள் ஆரம்பத்திலேயே பொருளாதார முடக்கத்தை சந்திக்க நேரிடுகிறது. ஆகவே வேலி அமைப்பதிலிருந்து விரையத்தை தவிர்த்தல் அவசியம்.
ஐயா நம்மாழ்வார் அவர்கள் பண்ணை வடிவமைப்பு மற்றும் உயிர்வேலி பற்றி பேசும் போது 9F என்ற வார்த்தையை உச்சரிக்கத் தவறுவதில்லை.. ஏனெனில் உயிரவேலி என்பது ஒரு மனிதனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவாக்குவார். 9F என்பதன் விளக்கம் மனித உணவு(food), கால்நடை உணவு(fodder), உடை(fabric), உற்பத்திக் கூடம்(factory), மரச்சாமான்கள்(furniture), வேலி(fenching), விறகு(fire wood), பசுந்தாள் எரு(fertilizer), ஈமச்சடங்கு(funeral). என இவையனைத்தும் பண்ணையிலும் பெரும்பகுதியாய் உயிர்வேலியிலிருந்தும் மனித வாழ்வோடு இணைக்கப்பட்டுள்ளதை உணரலாம். ஏக்கர் ஒன்றுக்கு செயற்கையான கம்பிவேலிகள் அமைப்பது ஒன்றரை இலட்சம் முதல் மூன்று இலட்சம் வரை வகைக்கு ஏற்றாற் போல் அமைகிறது. இது சிறு குறு விவசாயியின் கனவிலும் சாத்தியமற்றது, இவ்வளவு ஏன் பெரு விவசாயிகளுக்கும் பெரிய பொருளாதார இழப்பாக அமைகிறது. அத்தோடு கம்பிவேலி முறையில் பராமரிப்புச் செலவுகள் உள்ளன, இவை நீடித்த பலனை தருவதுமில்லை. இவற்றிற்கெல்லாம் பெரும் தீர்வாக உயிர்வேலி அமைகிறது .
உயிர்வேலி என்பது ஒவ்வொரு நிலப்பகுதிக்கும் மாறுபடும் அந்தந்த மண்ணுக்கும் சூழலுக்கும் தகுந்த உயிர்வேலி அமைப்பது அவசியமானது. உயிர்வேலி அமைப்பதின் முக்கிய நோக்கமாக விலங்குகளிடமிருந்தும் மனிதர்களிடமிருந்தும் மற்றும் இயற்கை சீற்றங்களிடமிருந்தும் விளைநிலங்களை காப்பதே ஆகும். உயிர்வேலியில் முள்வேலியே முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. மற்றும் மரவேலி, புதர்வேலி என சூழலுக்கு ஏற்றாற் போல் அமைக்கப்படுகிறது. உயிர்வேலி அமைக்கும் முறையானது நிலத்தின் எல்லையிலிருந்து நிலத்தின் உட்பக்கமாக எட்டடி வரைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லையிலிருந்து நான்கு அடி இடைவெளி விட்டு மூன்று அடி அகலத்திற்க்கு அகழி அமைப்பது அவசியமாகும். அகழிக்காகத் தோண்டப்படும் மண் எல்லைப் பக்கமாக கொட்டப்பட்டு அதில் உயிர்வேலி கன்றுகளை நடவுசெய்வதன் மூலம் கொட்டப்பட்ட மண்ணில் எளிதாக வேர்கள் ஓடி வளரச் செய்யும். இதில் அமைக்கப்பட்ட அகழியானது அருகில் இருக்கும் நிலத்தில் பயன்படுத்தப்படும் இரசாயன நஞ்சுகளை காற்றின் மூலமாகவோ மழைநீர் மூலமாகவோ நிலத்திற்குள் வருவதைத் தடுக்கிறது. அத்தோடு மழைநீரை அறுவடை செய்து நிலத்தடிநீரை உயர்த்தவும் பண்ணைக் குட்டை அமைக்கும் போது மழைநீரை கொண்டு செல்லும் வாய்க்காலாகவும் அமைத்துக் கொள்வது என பல்வேறு பயன்களைத் தரவல்லதாக அமைகிறது. பெரும்பாலும் உயிர்வேலியில் முள்மரங்களும் கால்நடைத் தீவன மரங்களுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றால் விவசாயிகள் தங்களுக்கான தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது. வேலியில் பயன்படுத்தப்படும் முள்மரங்களாக முள்கிழுவை, பரம்பை மரம், இலந்தை மரம், யானைக்கற்றாழை, ஒத்தக்கள்ளி, காக்காமுள், காரை, சூரை, சங்கமுள், கொடுக்காப்புளி, வெள்வேல், குடைவேல், வாதமடக்கி, பனைமரம் போன்ற உயிர்வேலிகள் உழவர்களுக்கு மட்டுமன்றி பறவை மற்றும் பிற உயிரினங்கள் வாழ வழி செய்கிறது. இதனால் வேளாண் நிலத்தின் ஓர் பன்மயச் சூழலை உருவாக்க முடிகிறது. ஆகியவற்றுடன் சவுண்டல், மலைவேம்பு, சவுக்கு, பீநாறி, நுனா ஆகிய நீள்குடை மரங்கள் காற்றின் வேகத்தைத் தடுத்து நிலத்தின் ஈரப்பதத்தை அதிகரிப்பதுடன் சாகுபடி செய்த பயிர்களை காக்கவும் செய்கிறது. இத்துடன் உயிர்வேலிகளில் பிறண்டை, முசுமுசுக்கை, வேலிப்பருத்தி, கோவக்கொடி, குறிஞ்சா கொடி, முடக்கத்தான், நொச்சி, சீந்தில் கொடி போன்ற மூலிகைகள் இயற்கையாகவே வளர்ந்து பலன் தரும். அதோடு சுரை, பீர்க்கு, பாகற்காய் என விவசாயிகள் தம் தேவைகளுக்கும் பயிரிட்டு பயனடைய முடியும். மண் அரிப்பை தடுக்கும் பனைமரம், வெள்வேல், குடைவேல், கொடுக்காப்புளி, போன்ற மரவேலிகளால் உயிர்மண் என்றழைக்கப்படும் நிலத்தின் மேல்மண் பெரும் மழையால் காற்றால் அடித்துச் செல்லப்படுவது தடுக்கப்படுகிறது எனவே நிலம் தன் வளத்தை இழக்காது. சவுண்டல், அகத்தி, முள்முருங்கை, கிளாரிசெடியா (உரக்கொன்றை), மலைக்கிழுவை, ஆமணக்கு ஆடாதொடை, நெய்வேலி காட்டாமணக்கு போன்றவை வேலிகளில் அமைப்பதன் மூலம் கால்நடைத் தீவனமாகவும் நிலத்திற்கான உரச்செடிகளாகவும் எண்ணற்ற வகைகளில் பயனளிக்கிறது. சமீப காலங்களில் உழவர்கள் தமக்கான உயிர்வேலிகளைத் தவிர்த்து சீமைக்கருவேல் மரத்தை வேலியாக அமைத்தனர். அவை நிலத்தடி நீரை உறிஞ்சியும் காற்றின் ஈரப்பத்தை உறிஞ்சியும் மழை பெய்யா சூழலை உருவாக்கி பெரும் வறட்சியை உண்டாக்கிவிட்டது. எனவே நம் மண்ணுக்கேற்ற சூழலுக்கேற்ற உயிர்வேலிகள் அமைப்பது அவசியமாகிறது.
சரியாக மழைக்காலங்களில் உயிர்வேலி அமைப்பதால் தொடக்கத்தில் மழை நீர் வழியாக உயிர் பிடித்துப் பின்னர் வறட்சி தாங்கி, நீண்ட பலன் தரும் அரணாக உயிர்வேலி அமைகிறது. ஐயா நம்மாழ்வார் அவர்கள் நம் வானகத்தில் மேற்கூறிய படி உயிர்ப்பான உயிர்வேலியை அமைத்துள்ளார். அதில் பரம்பை, பனை, சப்பாத்திக் கள்ளி, முள்ளு கற்றாழை, நெய்வேலி காட்டாமணக்கு ஆகியவற்றையும் கால்நடைத் தீவனமாக உரக்கொண்றை (கிளரிசெடியா), கிழுவை, இலந்தை,, காரை என வறட்சியைத் தாங்கி வரும் அரணாக உயிர்வேலி அமைக்கப்பட்டுள்ளது.
“வானகம்” இரா.வெற்றிமாறன் 9566667708

Monday, 28 September 2015

ஜீரோ பட்ஜெட் தமிழக விவசாயிகள்!!!!

ஜீரோ பட்ஜெட் தமிழக விவசாயிகள்!!!!
தமிழகத்தில் ஜீரோ பட்ஜெட் விவசாயம் செய்யும் விவசாயிகளின் பெயர்களும் தொலை பேசி எண்களும்.
1) சசி குமார் (நெல், தோட்டக்கலை, வனவியல்) தொலைபேசி -04422349769, 9381051483, 34/66, சரக்கு நிழல் சாலை (கூட்ஸ் ஷட் ரோடு), ஆதம்பாக்கம் , சென்னை -88
2) ஆர் கிருஷ்ணன் (Ratoon கரும்பு, நெல்) தொலைபேசி: 04179293679 ,09345770937, கொத்தூர் போஸ்ட், Tq-திருப்பத்தூர், Dt-வேலூர்
3) கே கே சோமசுந்தரம் (வாழை) பண்ணாடி தோட்டம், எம்.ஜி. புதூர் (வடக்கு), ஈரோடு-638502 Mb-09442931794
4) வி ஆனந்த் கிருஷ்ணன் (மா, சப்போட்டா, நெல்லி, மொசும்பி) 29, 3 வது கிராஸ், குறிஞ்சி நகர், புதுச்சேரி -605008 Mb-09842335700
5) கனகராஜன் கௌடர் (மல்பெரி) Mb-09994918190 கணியமூர் post, Tq-கள்ளகுறிச்சி -606207, Dt-விழுப்புரம்
6) கிரிஷ் எம் (நெல்-20 ஏக்கருக்கு பைகள், வாழை + வெங்காயம் + மிளகாய் + முருங்கை + மேரிகோல்டு + பூசணிக்காய்) தொலைபேசி: 04347231149 குண்டு கோட்டை, Tq-தேங்க நஞ்சகோட்ட , Dt-கிருஷ்ணகிரி-635107
7) NH நரசிம்ம ராவ் (மிளகாய், மஞ்சள் ,பட்டாணி, வாழை, மா, நெல்லி , நாவல்) தொலைபேசி: 04347291133, 09443365243, 09361520844 C / o சி நாகேஷ் N / ஆர் Checkpost, தபால்-தேன்கனி கோட்டா, Dt-கிருஷ்ணகிரி
8) எம் லோகேஷ், தொலைபேசி: 04344200734, 09443983855 No -4 / 765, பெட்டபெடகனஹல்லி , Tq-ஒசூர், Dt-கிருஷ்ணகிரி
9) எஸ் நவீன் குமார், S / o எம் செல்வராஜா (நெல், கரும்பு) At-சி என் பூண்டி, Tq-ஹோப்லி , Dt-ஷோளிகர் தொலைபேசி: 04172216240, 09341821034
10) நாகேஷ் பி (பாக்கு, தேங்காய்) தொலைபேசி: 04994232058, 09895914298 விஜய நிவாஸ், மோக்ரல் புத்தூர் போஸ்ட், Tq Dt-கசர்கோத் – 671128 (கேரளா)
11) என் செந்தில் குமார் (வாழை, மல்பெரி, நெல்லி , சப்போட்டா, மா, பப்பாளி, நெல்) At-அதுமரதுபள்ளி , தபால்-முல்லிபாடி , Dt-திண்டுக்கல்-624005 Mb-09865376317
12) கே விஜயகுமார் (வாழை) 140, அன்னூர் ரோடு, மேட்டுபாளையம் , Dt-கோயம்பதோர் Mb-09842524282
13) ஜகம் ராதாகிருஷ்ணன் (தென்னை, வாழை, தேக்கு) 34, ராமலிங்கனுர் , 1 ஸ்டம்ப் தெரு, திருவண்ணாமலை-606601 தொலைபேசி: 04175220024, 09443810950
14) எஸ் எம் கதிரேசன் (காபி, ஆரஞ்சு) தொலைபேசி: 04542266360, 09486373767 A/p- தண்டிகுடி, Tq-கொடைக்கானல், Dt-திண்டுக்கல்
15) எஸ்.கே. சேதுராமன் (தேங்காய் + சீமை அகத்தி) கஞ்சம்பட்டி , பொள்ளாச்சி, Dt-கோயம்பத்தூர் அருகில் ‘திருவள்ளுவர் பார்ம்ஸ்’, தென்குமரபாலயம் Mb-09842253540
16) பி முத்துச்வாமி (நெல், மக்காச்சோளம், மா, சப்போட்டா, நெல்லி , தென்னை, தேக்கு) At-கனிசோலை, மேட்டுக்கடை , கொடுமடி சாலை, முத்தூர் , Dt-ஈரோடு-638105 தொலைபேசி: 04257255365, 09965929098
17) KP துரைசுவாமி (நெல், புகையிலை, தேங்காய், மஞ்சள், தேக்கு) Mb-09443430335 வள்ளனமை சமமல் , ததரகாடு, தபால்-வாழைத்தோட்டம் , சிவகிரி-638109, Dt-ஈரோடு
18) ஆர் ஸ்ரீ குமரன் (மா, தென்னை, சப்போட்டா, கொய்யா) தொலைபேசி: 04523292013, 09443592425 ப்ளாட் No.8, சக்தி இல்லம், ராஜ்நகர் , 1st சாலை, சாந்தி நகர், மதுரை 625018
19) ஏ ஜி ராஜ் (திராட்சை) 2, மாடசுவாமி பிள்ளை, Tq-போடி நாயக்கனூர் , Dt-தேனி Mb-09944447722
20) ஆர் கிருஷ்ண குமார் (80 விவசாயிகள் குழு) (நெல், கரும்பு) 43, ஈஸ்வரன் கோயில் தெரு, கோபிசெட்டிபாளையம் -638452, Dt-ஈரோடு தொலைபேசி: 04285222397, 09842775059
21) புரவி முத்து (மா, சப்போட்டா, நெல்லி , ஜாமுன் , தேக்கு, மிளகாய், காய்கறிகள்) கனிசோலை , கொடுமுடி ரோடு, மேட்டுக்கடை , முதூர் , ஈரோடு, 638105 தொலைபேசி: 04257313855, 09965929098, 09965796522
22) ஆர் கோவிந்தசாமி (காய்கறிகள்) பழனியப்பா தோட்டம் , வெள்ளலூர் சாலை, சிங்கநல்லூர் , கோயம்புத்தூர் 641 005 செல் எண்: 09976450367, 093457 16598
23) ஆர் மணி சேகர் (நாட்டு மாட்டு வழங்குபவர்) தொலைபேசி: 08026543525, 04282221241, 09449346487 புத்திர கௌண்டர் பாளையம் , Dt-சேலம் 636 119
24) திருமதி ராஜேஸ்வரி செழியன் (நெல், தேங்காய், கரும்பு) 72/58, பங்களா தெரு , நாகரபட்டி , TK-பழனி, Dt-திண்டுக்கல் Mb-09442265057, 09442243380
25) ஏ மீனா (கரும்பு, தென்னை, வாழை, மிளகாய், காய்கறிகள்) 14, சிவன் கோயில் தெற்கு, தேவகோட்டை -630302, Dt-சிவகங்கை Mb-09444150195
26) பெ சோமசுந்தரன் (Awala) செல் எண் 09363102923 3 & 4, தரை தளம், புதிய எண் 55, ராஜூ நாயுடு ரோடு, சிவானந்தா காலனி, கோயம்புத்தூர் 641 012
27) வி கமலநகன் தொலைபேசி: 04175223677, 09894536616 நோர்தேருபூண்டு , Tq & Dt-திருவண்ணாமலை
28) கே.சி. முனிசாமி (தேங்காய், மல்பெரி) (20 விவசாயிகள் குழு) சந்திரன் வெண்ணிலா விவசாயிகள் கிளப், அக்ராவரம் , தபால்-வளையல் கரபட்டி, வழியாக மடனுர் , Dt-வேலூர்-635804 Mb-09787459820
29) ஆர் பாலசந்திரன் (சப்போட்டா, நெல்லி , வாழை) தொலைபேசி: 04132688542, 09442086436 3 / 14, மெயின் ரோடு, P.S. பாளையம், பாண்டிச்சேரி மாநிலம்-605107
30) TS தனோடா பானி (கரும்பு, நெல், காய்கறிகள்) A/P- ராமபக்கம், Dt-விழுப்புரம்-605705 தொலைபேசி: 04132699023, 09786484243
31) பி ஸ்ரீனிவாசன் (நெல், காய்கறிகள்) Mb-09791379855 மெயின் ரோடு, கொங்கம்புட்டு, தபால்-ராமபக்கம் , Tq & Dt-விழுப்புரம் – 605105
32) ஜி கிருஷ்ண மூர்த்தி (கரும்பு, நெல், சோளம், கேழ்வரகு, காய்கறிகள்) At-கொங்கம்பட்டு , தபால்-ராமபக்கம் , Dt-விழுப்புரம் தொலைபேசி: 04132699921
33) பி வெங்கடேஷ பெருமாள் (கரும்பு, காய்கறிகள்) Mb-09486366082. 2 / 105, மெயின் ரோடு, கொங்கம்பட்டு , தபால்-ராமபக்கம் , Dt-விழுப்புரம் – 605105
34) ஆர் ரவிக்குமார் (தேங்காய்) Mb-09943978256 ரவி கணினி, 2, பை பாஸ் ரோடு, உடுமலைபேட்டை, Dt-கோயம்புத்தூர்
35) என் அண்ணாதுரை (நெல்) Mb-09976383567 At-உமையாள்புரம் , தபால்-செவேந்தளிங்கபுரம் , Tq-முசிறி , Dt-திருச்சி-621202
36) பிரபு ராம் (நெல்) மணி நாய்டு தோட்டம் , குனியமுத்தூர் , கோயம்புத்தூர் Mb-09363147111
37) திருமதி அன்னபூர்ணா (பனை) 12, SSD சாலை, திருதம்கோடு , Dt-நாமக்கல் தொலைபேசி: 04288253310, 09842350275
38) முகேஷ், S / o எம் சதாசிவம் (நெல், தென்னை, வாழை) தொலைபேசி-04563288519 2/181-A, வடக்கு தெரு, சேது நாராயணபுரம் , via வற்றப் , Dt-விருதுநகர்
39) ஜி சக்திவேலு , பசுமை சேமிக்க குரல் NGO (நெல், பிளாக் கிராம், பச்சை கிராம்) 4 / 92, யாதவ தெரு, போஸ்ட்-சிக்கில் , Dt-நாகப்பட்டினம் Mb-09994200246
40) YM முத்துக்குமரன் (நெல், கரும்பு, காய்கறிகள்) Mb-09443062264 17, அரசு தோட்டங்கள், மில்லர் சாலை, ஆரணி -1, Dt-திருவண்ணாமலை
41) டி திம்மையா, S / o எம் திரு மேசாமி (தேங்காய், சூரியகாந்தி) A/P- கோனூர் , via கமிவடி , Dt-திண்டுக்கல்-624705 Mb-09360565596
42) விஜயசேகரன் (தேங்காய்) Mb-09842226668 கிராமம் -மதன்காடு அவில்பட்டி , தபால்-ஏ நாகூர் , TK – பொள்ளாச்சி, Dt-கோயம்புத்தூர்
43) ஏ இளங்கோ (நெல், நிலகடலை , பிளாக் கிராம், பச்சை கிராம்) Mb-09442693700 கிராமம் -கச்பகரனை , தபால்-அசொகபுரி, T.K. & Dt-விழுப்புரம் – 605 203
44) ஆர் ராமச்சந்திரன் (முந்திரி & முந்திரி பதப்படுத்தும்) கிராமம் -மனடிகுப்பம், தபால்-வல்லம், TK-பண்ருட்டி , Dt-கடலூர் – 607 805 தொலைபேசி: 04142266366, 09976993536, 09976993411
44) பி ஸ்ரீநிவாசன் (நெல் 20 ஏக்கர்) Mb-09791379855 கிராமம் -கொங்குபெட் , தபால்-ராம்பக்கம், Dt-விழுப்புரம்
45) டி எஸ் தண்டபாணி (கரும்பு) Mb-09786484243 1 / 92, சிவன் கோயில் தெரு, ராம்பக்கம் , Dt-விழுப்புரம்
46) எஸ் பாலமுருகன் (வாழை + வெங்காயம் + பட்டாணி + காய்கறிகள்) (கரும்பு உள்ளூர் பிளாக் வெரைட்டி) தொலைபேசி: 04288254864, 09843007477 எண் 6, C.H.B. காலனி, தெரு எண் 7, வேலூர் சாலை, திருச்செங்கோடு – 637 214, Dt-நாமக்கல்
47) டி கே பி நாகராஜன் (நெல், Osambu, மீன் குளம்) தொலைபேசி: 04374239757, 09944344608 கிழக்கு தெரு, இரும்போதலை , via -சாலியமங்கலம் , Dt-தஞ்சாவூர்
48) என் விவேகாநந்தன் (கரும்பு + வெங்காயம் + மாட்டு EPA + மிளகாய் + தானியங்கள்) Dt-ஈரோடு கிராமம் -சின்னப்பள்ளம் , தபால்-நேவிரிகிபேட்டை, TK-பவானி, Mb-09444294095
49) ஆர் காமராஜ் (கிச்சன் கார்டன்-அனைத்து காய்கறிகள்) Mb-09894227114, 09787488632 எண் 8, ஸ்ரீனிவாச நகர் , நல்லன் பாளையம் , கணபதி போஸ்ட் , கோயம்புத்தூர்
50) கே முத்துக்குமார், S / o எம் கதிரேசன் (காபி, ஆரஞ்சு) கரியாம்மாள் கோவில் தெரு, TK-கொடைகனல் , Dt-திண்டுக்கல் Mb-09486162801, 09486373767
51) ஆர் தேவ தாஸ் (நெல், காய்கறிகள் ) தொலைபேசி: 04622553541, 09443155309 A-4, A-காலனி, ஜவஹர் நகர், திருநெல்வேலி – 627 007
52) எம் லாவண்யா W / O முருகன் (தேங்காய்) Mb-09942665059, 04373-274705 கிராமம் -மருங்கப்பள்ளம் , TK-பெறவுரணி , Dt-தஞ்சாவூர்
53) எம் பெரிய சுவாமி (தேங்காய், Eucaliptus) Mb-09787742192, 04257-250249 Dt-ஈரோடு vi-கந்தசாமி பாளையம், தபால்-மங்கலப்பட்டி, TK-காங்கேயம் ,
54) கே முத்து குமரேசன் (நெல், நிலகடலை , மரவள்ளிக்கிழங்கு, மஞ்சள், குள்ள தேங்காய்) கிராமம் -கூலமேடு , தபால்-கடம்பூர் , TK-ஆத்தூர், Dt-சேலம் 636 105 Mb-09843638825
55) தமிழ் மணி , S / o பாதமுத்து (பருத்தி, தக்காளி) 55-A, பரா சக்தி டெக்ஸ்டைல், வைத்யா லிங்க புரம், TK-ஸ்ரீவில்லிபுத்தூர் , Dt-விருது நகர்
56) எஸ் உடையப்பன் (பருத்தி) கிராமம் -உசிலம்பட்டி , தபால்-கருங்கலகுடி , TK-மேலூர், Dt-மதுரை
57) ஏ கே நேதாஜி (நெல் உள்ளூர்) தொலைபேசி: 044126330217, 09940267627 கிராமம் -அங்காடு, தபால்-புதூர் , TK-பொன்னேரி , Dt-திருவள்ளூர்
58) கே வரதராஜன் (நெல்) Mb-09444554466 ஓரக்கேன் போஸ்ட், TK-பொன்னேரி , Dt-கடலூர்
59) பி ராமகிருஷ்ணன் (மஞ்சள், சேனைக்கிழங்கு, நெல்) 51, M.V.K. நகர், பெரம்பலூர்-621 212 தொலைபேசி: 04328275763, 09443954642
60) சி கரகராஜ் (வாழை + நிலகடலை ) Mb-09843719794 கிராமம் -நக்க சேலம் , TK-குன்னம் , Dt-பெரம்பலூர்
61) ஆர் பாண்டியன் (வாழை + நிலகடலை ) Mb-09344422966 11, இளங்கோ வளாகம், கோர்ட் ரோடு, தஞ்சாவூர்-1
62) ஜி மணிவண்ணன் (தென்னை, மா, நெல்லி ) தொலைபேசி: 04362279726, 09443155075 தஞ்சை சந்தோஷ் பேக்கரி , 85, கோர்ட் ரோடு, தஞ்சாவூர் 613 001
63) SR திருவேங்கடம் (தென்னை, தேக்கு, கிச்சன் கார்டன்) Mb-09486043165 வடக்கு தெரு, வடுவூர் – 614 019, Dt-திருவாரூர்
64) என்.கே. சக்திவேல் (தேங்காய், முருங்கை , சூரியகாந்தி, நிலகடலை , எள், அனைத்து காய்கறிகள்) வில்-மந்தபுரம் , V மேட்டு பாளையம் போஸ்ட் , via வெல்ல கோவில் – 638 111, Dt-ஈரோடு Mb-09865263375
65) வஜியடனே , S / o இருசப்பனே Mb-09786902281 எண் 493, பிள்ளையார் கோவில் தெரு, கட்டியம் பாளையம் , தபால்-பண்றகொட்டை , TK-பண்ருட்டி , Dt-கடலூர்
66) எஸ் பி சுப்பிரமணியன், S / o எஸ் கே பழனி (வாழை) Mb-09443711937 7/146-1, கரத்தன் காடு, செம்போட பாளையம், சதுமுகை அஞ்சல், சத்தியமங்கலம் TK, Dt-635 503 ஈரோடு
நன்றி: ஜீரோ பட்ஜெட் இனைய தளம்.

Sunday, 20 September 2015

பேச்சுலர்களுக்கான ஹெல்தி ரெசிப்பி!

பேச்சுலர்களுக்கான ஹெல்தி ரெசிப்பி!

”உடம்பை பார்த்துக்க ராசா, நல்லா சாப்பிடுய்யா சாமி” – பணி நிமித்தம் உறவுகளையும், சொந்த ஊரையும் விட்டு பிரிந்து வாழும் பிள்ளைகளின் செல்போனில் தினமும் கேட்கும் வசனம் இதுதான்.
உடுத்தும் உடையிலும் பயணிக்கும் வாகனத்திலும் அக்கறை காட்டும் இன்றைய பேச்சுலர்கள், உண்ணும் உணவில் காட்டும் கவனம் மிகக் குறைவுதான். அந்த ‘மேன்ஷன் ராசா’க்களுக்காக, சில நொடிகளில் செய்யக்கூடிய சில சிம்பிள் ரெசிப்பிகளைக் கூறினார் சென்னை சிறுதானிய உணவியலாளர் ராஜா முருகன். கோவை கேட்டரிங் கல்லூரி உணவியலாளர் ஷர்மிளா நமது வாசகர்களுக்காக அவற்றைச் செய்து காட்டினார்.
”பெருநகரங்களில் அறை எடுத்துத் தங்கி, கல்லூரி செல்லும் மாணவர்களும் சரி. வேலைக்கு போகும் இளைஞர்களும் சரி, காலை உணவையே மறந்து வாழ்கின்றனர். இன்னும் சிலர் ‘சமைத்துச் சாப்பிடுவோம்’ என்று முடிவு எடுத்து, சரியாக சமைக்கத் தெரியாமல் பாதி வெந்தும், வேகாமலும், காரம் அதிகமாகவும், உப்பு போட மறந்தும்… என ஏகப்பட்ட களேபரங்களுடன் ஏனோ தானோ என்று சாப்பிட்டு, உடலைக் கெடுத்துக்கொள்கின்றனர். விளைவு, வயது கூடக்கூட, உடலில் எதிர்ப்பு சக்தியும், ஸ்டாமினாவும் குறைந்து நோய்வாய்ப்படும் வாய்ப்பு உருவாகிறது” என்று எச்சரிக்கை விடுத்தபடியே, பேச்சுலர் ரெசிப்பிக்களில் உள்ள சத்துக்களையும் அவற்றின் பலன்களையும்  விளக்குகின்றார் உட்டச்சத்து நிபுணர் கற்பகம்.
அட்டென்ஷன் பேச்சுலர்ஸ்…!
1. காலை உணவைத் தவிர்த்தால் வயிற்றில் புண், உடல் சோர்வு, மயக்கம், தலை சுற்றல் ஏற்படும். வயிற்றில் சுரக்கும் அமிலம், வயிற்றை அரிக்கத் துவங்கிவிடும். சில நாட்களில் அதுவே அல்சராக மாறி, பாதிப்பை ஏற்படுத்தும். ரத்தத்தில் சக்கரையின் அளவும் அதிகரிக்கும். மேலும் உடல் பருமன், தொப்பை வரக் காரணமாக அமைந்துவிடும் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி.
2. காரம் குறைவான உணவுகளைச் சமைத்து உண்ணுங்கள். எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும் தன்மை காரத்துக்கு அதிகம்.
3. அதிகப்படியான காய்கறிகளைச் சமைத்துச் சாப்பிடுங்கள். சுறுசுறுப்பாகச் செயல்பட பெரிதும் உதவும்.
இனிப்பு அவல் பிரட்டல்
தேவையானவை: சிவப்பு அவல் – 100 கிராம், வெல்லம் – 50 கிராம், தேங்காய் துருவல் – ஒரு கப், உப்பு – சிறிதளவு, பொடித்த சுக்கு, ஏலக்காய் – ஒரு சிட்டிகை, முந்திரி, திராட்சை – சிறிதளவு.
செய்முறை: சிவப்பு அவலைத் தண்ணீரில் சுத்தப்படுத்தி, சிறிதளவு உப்பு சேர்த்து ஈரத்துடன் 10 நிமிடம் ஊறவைக்கவும். வெல்லத்தை இடித்துப் பொடியாக்கி சேர்த்து, சுக்கு, ஏலக்காய் பொடியைக் கலந்து நன்றாகக் கிளறவும். கடைசியில் இதில் முந்திரி,  திராட்சை சேர்த்து உண்ணலாம்.
பலன்கள்:  சிவப்பு அவலில் கலோரி, கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின் பி நிறைந்துள்ளது. வெல்லத்தில் இரும்புச்சத்து இருப்பதால் உடலுக்கு நல்லது. காலை உணவாக இதைச் சாப்பிடுவதன் மூலம், அந்த நாளுக்குத் தேவையான முழுச் சத்துக்களும் கிடைத்துவிடும்.
கம்பு ரொட்டிப் பிரட்டல்
தேவையானவை: கம்பு – 300 கிராம், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், கடுகு, சீரகம், இஞ்சி பூண்டு விழுது – தலா ஒரு சிட்டிகை, வெங்காயம், தக்காளி – தலா 100 கிராம், பச்சை மிளகாய் – 3, புதினா – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு, கரம் மசாலா தூள் – அரை டீஸ்பூன்.
செய்முறை: கம்பு மாவை சப்பாத்தி மாவுப் பதத்துக்கு பிசைந்து, பதமாக இட்டு, தோசைக் கல்லில் இரு புறமும் ரொட்டி போல் சுட்டு எடுத்து, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பொன்னிறமாக வதங்கியதும், நறுக்கிய தக்காளி, கரம் மசாலா, உப்பு சேர்த்து, மசாலா வாசம் போக வதக்கவும். நறுக்கிவைத்துள்ள கம்பு ரொட்டி துண்டுகளை சேர்த்துக் கிளறவும். சுவையான கம்பு ரொட்டிப் பிரட்டல் தயார்.
பலன்கள்: கம்பில் இரும்பு, மக்னீசியம், வைட்டமின் பி மற்றும் சி போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடலுக்கு அதிகம் வலு சேர்க்கும்.
கீரை ஜாம்
தேவையானவை: பொன்னாங்கண்ணிக் கீரை, பசலைக்கீரை (பாலக்), முளைக்கீரை – தலா ஒரு கட்டு, வெல்லம் – 500 கிராம்.
செய்முறை: கீரைகளை மிக்சியில் நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள கீரைக் கலவையை, பச்சை வாடை போகும் அளவுக்கு, வதக்க வேண்டும். நீர் வற்றியதும், பொடியாக்கிவைத்துள்ள வெல்லத்தைச் சேர்த்து, தொடர்ந்து 15 முதல் 20 நிமிடம் வரை கிளறவும். ஜாம் போல இறுகியதும் இறக்கவும்.
இந்த ஜாமை ஃப்ரிட்ஜில் 3 மாதம் வரை வைத்துப் பயன்படுத்தலாம். பிரட், சப்பாத்தி போன்றவற்றில் தடவிச் சாப்பிடலாம்.
குறிப்பு: கொத்துமல்லி, புதினாவுக்கு துவர்ப்புத்தன்மை அதிகம் இருப்பதால், சேர்க்க வேண்டாம். சுவையை மாற்றும் தன்மை கொண்டவை இவை.
பலன்கள்: இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, கால்சியம், நீர்ச் சத்து, பாஸ்பரஸ் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது. உடலுக்கு மிகவும் நல்லது.
  காய்கறி அவல் பிரட்டல்
தேவையானவை: சிவப்பு அரிசி அவல், துருவிய கேரட், மஞ்சள் பூசணி துருவல்  – தலா 100 கிராம், மாங்காய் துருவல், நெல்லிக்காய் துருவல் – தலா 50 கிராம், கொத்தமல்லி – ஒரு கைப்பிடி, மிளகுத்தூள் – சிறிதளவு, இஞ்சி – சிறு துண்டு.
செய்முறை: சிவப்பு அவலைத் தண்ணீரில் சுத்தப்படுத்தி, சிறிது உப்பு சேர்த்து ஈரத்துடன் 10 நிமிடம் ஊறவைக்க வேண்டும். இதனுடன் துருவிவைத்துள்ள கேரட், மாங்காய், பூசணி, நெல்லிக்காய் துருவல்களைச் சேர்த்து நன்கு கிளறவும். கடைசியில் அரைத்த இஞ்சியுடன், கொத்தமல்லி, மிளகு, உப்பு சேர்த்து கிளறவும்.
குறிப்பு: மாங்காய் இல்லை என்றால், சில துளிகள் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கிளறிச் சாப்பிடலாம்.
பலன்கள்: அவலுடன் கேரட் சேரும்போது வைட்டமின் சத்துக்கள் அதிகரிக்கும். பூசணியில் உள்ள தாதுக்கள் உடலுக்கு நல்லது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறையும். இதை காலை உணவாகவும் மதிய உணவாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
மல்லி சாமை சோறு
தேவையானவை: சாமை புழுங்கல் அரிசி – 200 கிராம், கொத்துமல்லி – ஒரு கட்டு, புதினா, கறிவேப்பிலை – சிறிதளவு, பச்சை மிளகாய் – 4, இஞ்சி பூண்டு அரைத்த விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய் – 3, பட்டை – 5, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – 2 கரண்டி.
செய்முறை: கொத்துமல்லி, கறிவேப்பிலை, புதினா, இஞ்சி, பூண்டு இவற்றை மிக்சியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பட்டை, ஏலக்காய் சேர்த்து வாசம் வர வறுத்து, அத்துடன் அரைத்துவைத்துள்ள கலவையைச் சேர்த்து நன்றாக வதக்கவும். 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி (1:2 என்ற விகிதத்தில்) குக்கரில் இரண்டு விசில் வரும் வரை வைத்து இறக்கவும்.
இதனுடன் கேரட், வெள்ளரி, வெங்காயம் சேர்த்து தயிர் பச்சடியாகவும் செய்து சாப்பிடலாம்.
பலன்கள்: புரதச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் நிறைந்துள்ளது. கொழுப்பைக் குறைக்கும். பசியைக் கட்டுப்படுத்தும்.
தினை தேங்காய் கஞ்சி
தேவையானவை: தினைப் புழுங்கல் அரிசி – 200 கிராம், பாசிப் பருப்பு – 100 கிராம், பூண்டு – 4 பல், மிளகு, வெந்தயம் – சிறிதளவு, தேங்காய்ப் பால் – ஒரு கப், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: தினை மற்றும் பாசிப் பருப்பைக் கழுவிச் சுத்தம்செய்து, ஒன்றுக்கு ஆறு என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவைக்கவும்.  இதனுடன் வெந்தயம், பூண்டு, மிளகு சேர்த்து 5 அல்லது 6 விசில் வரும் வரை குக்கரில் வேகவைக்க வேண்டும். இறுதியாக தேங்காய்ப் பால் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, குழைய வேகவைக்க வேண்டும். சுவையான தினை தேங்காய் கஞ்சி தயார்.
பலன்கள்: தினையில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட், தாதுக்கள், நுண் சத்துக்களும் நிறைந்துள்ளது. கலோரிகள் நிரம்பிய உணவு என்பதால் ஆற்றல் கொடுக்கும்.

Sunday, 6 September 2015

அரிசிச் சோறு ஆரோக்கியம்தானா?

அரிசிச் சோறு ஆரோக்கியம்தானா?


“எடையைக் குறைக்கணுமா? அரிசியை கட் பண்ணுங்க... சாதம், இட்லி, தோசை... எல்லா அரிசி உணவுகளையும் நிறுத்திட்டு, சப்பாத்தி, ஓட்ஸ் சாப்பிடுங்க” என நிறைய ஃப்ரீ அட்வைஸ் கிடைக்கிறது. இளம்பெண்கள் பலர் ஃபிட்டாக இருக்கவேண்டும் என்பதற்காக, அரிசி உணவைத் தவிர்க்கிறார்கள். அரிசி நம் பாரம்பர்ய உணவு. நம் ஊரில் விளையும் அரிசியைத் தவிர்த்து, அயல்நாட்டில் இருந்து இறக்குமதியாகும், மற்றோர் உணவைச் சாப்பிடுங்கள் எனும் பிரசாரம் மேலோங்கும் நிலையில், அரிசி தவிர்க்க வேண்டிய உணவுதானா என்கிற குழப்பம் பரவலாக இருக்கிறது.
இயற்கை எப்போதுமே ஒவ்வோர் இடத்திலும் அந்தந்த மக்களுக்கு அவர்களின் காலநிலைக்கு ஏற்றவாறுதான் உணவைத்  தருகிறது. அரிசி சாதம் சாப்பிடுவதால் உடல் எடை கூடும் என்பது உண்மைதான். 100 கிராம் சமைக்காத அரிசியில் 300 - 350 கலோரி இருக்கிறது. அதிக கலோரி உள்ள உணவுகளில் அரிசிக்கு எப்போதுமே முக்கிய இடம் உண்டு. ஆனால், எளிதில்  செரிமானமாகும் உணவும் அரிசிதான். இனி, அரிசியைப் பற்றி விலாவாரியாக அலசுவோமா?
அரிசியில் பல வகைகள் இருக்கின்றன. மஞ்சள் - பழுப்பு நிறங்கள் கலந்த அரிசிதான் உடலுக்கு நல்லது. அதில்தான் நார்ச்சத்து, புரதம் ஆகியவை இருக்கும்.
ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் அரிசி ‘பளீர் வெள்ளை’ நிறத்தில் இருக்கும். அரிசியை மேலும் மேலும் பாலீஷ் செய்வதன் காரணமாகவே வெள்ளை நிறத்துக்கு மாறுகிறது.
வெள்ளை நிற அரிசி உடலுக்குக் கேடுவிளைவிக்காவிட்டாலும், அதில் உள்ள சத்துக்கள் நீங்கிவிடுவதால் ஊட்டச்சத்துக்கள் கிடைப்பது இல்லை.
பொன்னி அரிசி விலை அதிகமாகவும் சுவையாகவும் இருக்கலாம். ஆனால், அதிக முறை பாலீஷ் செய்யும்போது, அதில் சத்துக்கள் நீங்கிவிடும். மாவுச்சத்து மட்டுமே இருக்கும்.
மாவுச்சத்து மட்டுமே இருக்கும் உணவுகள் எளிதில் உணவு சாப்பிட்ட திருப்தியைத் தராது. அளவுக்கு அதிகமான மாவுச்சத்து, கொழுப்பாக மாற்றப்பட்டு சேகரிக்கப்படும். உடல் எடையைக் கூட்டும்.
எந்த அரிசியைச் சாப்பிடுவது?
நார்ச்சத்து, புரதச்சத்து ஓரளவு இருக்கும் அரிசியை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.
அரிசியை மில்லில் அரைக்கும்போது, அதில் உள்ள தவிடுகளை முழுமையாக நீக்கிவிடுவார்கள்.
தவிட்டில் நார்ச்சத்து, புரதச்சத்து, அமினோ அமிலங்கள் இருக்கின்றன. எனவே, முழுமையாக தவிடு நீக்கப்பட்ட அரிசியைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
கைகுத்தல் அரிசி, தவிடு நீக்கப்படாத பழுப்பு அரிசி போன்றவற்றைச் சாப்பிடலாம். இவற்றைவிடவும் கேரளாவில் பயன்படுத்தப்படும் சிவப்பரிசியில் அரியவகை ஆன்தோசயனின் சத்து இருக்கிறது.
அரிசி உணவுகளை எப்படிச் சாப்பிடவேண்டும்?
அரிசி உணவுகளை அறவே தவிர்ப்பதும் அதிகமாகச் சாப்பிடுவதும் தவறான பழக்கம். உடல் எடையைக் குறைக்க அரிசி உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பது தவறான கருத்து.
அரிசி உணவுகளைச் சாப்பிட்டே உடல் எடையைச்  சீராகக் குறைக்க முடியும்.
மதிய உணவில் இரண்டு கப் காய்கறி, அரை கப் சாம்பார், அரை கப் ரசம் ஆகியவற்றோடு ஒரு கப் சாதம் மட்டுமே இருக்க வேண்டும்.
சாதத்துடன் சாம்பார் அல்லது கூட்டு, சாதம் - மீன், சாதம் - தோல் நீக்கிய, வேகவைத்த கோழி, சாதம் - முட்டை என்ற காம்போவில் சாப்பிடும்போது மாவுச்சத்துடன், புரதச்சத்து, அமினோ அமிலங்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்றவை சரிவிகிதத்தில் கிடைக்கின்றன.
குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும், நோயாளிகளுக்கும் இட்லி மிகச் சிறந்த உணவு. அனைவருமே சாப்பிட ஏற்றது. வெள்ளை அரிசியைவிட கைத்குத்தல் அரிசி, சிவப்பு அரிசி, பழுப்பு அரிசி, குதிரைவாலி அரிசி போன்றவற்றில் இட்லி, தோசை, இடியாப்பம், ஊத்தாப்பம் செய்து சாப்பிடுவது சிறந்தது. 
இட்லியுடன் சாம்பார் அல்லது புதினா சட்னி ஆகியவற்றைச் சேர்த்து, மெதுவாகச் சாப்பிட வேண்டும். நடுத்தரமான அளவுள்ள இட்லி நான்குக்கு மேல் சாப்பிடுவது நல்லது அல்ல. எண்ணெயை மிகக் குறைவாகப் பயன்படுத்தி, தோசை செய்து சாப்பிடலாம்.
அரிசி, கலோரி அதிகமானது என்பதால், எப்போதும் அதனுடன் கலோரி குறைந்த உணவுகளைத்தான் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். சாம்பார் சாதம், தயிர் சாதம், புதினா சாதம், கீரை சாதம் போன்றவற்றை அளவாகச் சாப்பிடலாம்.
என்னென்ன அரிசி உணவுகளைத் தவிர்க்க வேண்டும்?
ஹோட்டலில் அதிக எண்ணெய் ஊற்றி சுடப்படும் தோசையைத் தவிர்க்க வேண்டும்.
பிரியாணியில் நெய், எண்ணெய் போன்றவை சேர்க்கப்பட்டு இருக்கும். எனவே, இவற்றை அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
ஃப்ரைடு ரைஸை அறவே தவிர்ப்பது சிறந்தது.
எண்ணெய் அதிகம் ஊற்றிச் செய்யப்படும் எலுமிச்சை சாதம், புளி சாதம் போன்றவற்றையும் அடிக்கடி சாப்பிடக் கூடாது.
- பு.விவேக் ஆனந்த்

15 பாடிகாட்ஸ்! உச்சி முதல் உள்ளங்கால் வரை...

15 பாடிகாட்ஸ்! உச்சி முதல் உள்ளங்கால் வரை...
"உடலின் அனைத்து உறுப்புகளும் திறம்பட இயங்கினால்தான் நம்மால் அன்றாட வேலைகளை சிறப்பாகச் செய்ய முடியும். ஒவ்வொர் உறுப்பையும் பாதுகாக்க, தனிக் கவனம் எடுப்பது நல்லது. இதற்கு, பெரிய மெனக்கெடுதல்கள் தேவை இல்லை. நம் அன்றாட உணவில் சின்ன சின்ன மாற்றங்களை செய்தாலே போதும்.  சில உணவுப் பொருட்களின் தோற்றம், குறிப்பிட்ட உறுப்புகளின் தோற்றத்துடன் பொருந்தியிருப்பதோடு, அவற்றைச் சாப்பிடும்போது, அந்தந்த உறுப்புகளுக்கு பலத்தையும் கூட்டுகின்றன” என்று சொல்லும் ஊட்டச்சத்து ஆலோசகர் ஸ்ருதிலயா எந்தெந்த உணவுகள், எந்தெந்த உறுப்புகளோடு பொருந்துகின்றன என்பதையும், அவை என்னென்ன நன்மைகளைத் தருகின்றன என்பதையும் விளக்குகிறார்.

மூளை - வால்நட்

வால்நட்டின் வடிவத்தைக் கவனித்திருக்கிறீர்களா? மூளையின் மினியேச்சர் போலவே இருக்கும். அக்ரூட்டை பிரெய்ன் ஃபுட் (மூளை உணவு) என்பார்கள். ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளதால் மூளையின் செயல்பாட்டுக்கும், சீரான இயக்கத்துக்கும், வளர்ச்சிக்கும் உதவுகிறது. குழந்தைகள், பள்ளி செல்லும் பிள்ளைகள், கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகளில் ஒன்று வால்நட். அறிவுத்திறன் (ஐ.க்யூ) மேம்படவும், படைப்பாற்றல் அதிகரிக்கவும் உதவும்.
சமீப ஆய்வுகளில், வால்நட்டில் புரதச்சத்துக்கள் இருப்பதால், மறதி நோய் வராமல் தடுக்கும் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தினமும் இரண்டு மூன்று அக்ரூட் சாப்பிட்டுவந்தால், மூளை செல்கள் புத்துயிர் பெறும். உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
 

 
கண்கள் - கேரட், பாதாம்

ண்களை ஆன்மாவின் ஜன்னல் என்பார்கள். கண்களைப் பாதுகாக்க  சன் கிளாஸ், கண்ணுக்கான பயிற்சிகள், அடிக்கடி கண்களைக் கழுவுதல், ஆண்டுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்வது நல்லது.
பார்வைத்திறன் மேம்பட கேரட், பப்பாளி நல்ல பலனைத் தரும். கேரட்டை குறுக்காக வட்ட வடிவில் வெட்டினால், கண்ணின் (Pupil, iris) தோற்றத்தைப் போல இருக்கும். தினமும் ஒரு கேரட் சாப்பிட்டால், கண்களில் புரை உருவாவது தடுக்கப்படும். கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டீன், வயதாகும்போது வரும் பார்வைக்குறைபாடுகளை (Macular degeneration) தடுக்கும். கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்ற பிரச்னைகள் வராது. கண்களுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். அதுபோல், பாதாமின் தோற்றம், கண்களின் வெளிப்புற அமைப்பைப் போலவே இருக்கும். கண்களுக்கு நன்மையைச் செய்யக்கூடிய சத்துக்கள் பாதாமில் நிறைந்துள்ளன. கண் மை தயாரிப்புக்கு பாதாம் முக்கிய பொருள். தினமும், நான்கைந்து பாதாமை சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது.

காது - காளான்
காதுகளில் காக்லியா (Cochlea) எனும் கேட்கும் திறனுக்கான உறுப்பு வளர வைட்டமின் டி தேவை. அவற்றை காளானும் சூரிய ஒளியும் தரும். காளானில் வைட்டமின் டி, டி3, டி2  சத்துக்கள் நிறைந்துள்ளன. கால்சியம் சத்தை உடல் கிரகித்துக்கொள்ள வைட்டமின் டி உதவுகிறது.
உள்ளுறுப்புகளின் வளர்ச்சி, ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு ஆதாரமாக காளான் இருக்கிறது.  மார்பகம், பிராஸ்டேட் புற்றுநோய்களைத் தடுக்கும். அதிகமாக ஈஸ்ட்ரோஜன் சுரப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகளைச் சரி செய்யும். விலங்குகளிடமிருந்து பெறப்படும் புரதத்தை காளானிலிருந்தும் பெற முடியும்.

நுரையீரல் - திராட்சை

திராட்சைக் கொடியில் தொங்கும் திராட்சைப் பழத்தைப் பார்த்தால், திராட்சைக் கொத்து நுரையீரல் போலவும், அதில் உள்ள ஒவ்வொரு திராட்சையும் ஆல்வியோலி எனப்படும் நுண்காற்று அறைகள் போலவும் தோன்றும். ரத்தத்தில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடைச் சுத்திகரித்து, சுவாசக் காற்றில் உள்ள ஆக்சிஜனைப் பிரித்து, ரத்த அணுக்களில் நிறைத்து அனுப்புகிறது நுரையீரல். இந்தச் செயல்பாட்டை மேம்படுத்தும் திறன், திராட்சைப் பழத்துக்கு உண்டு. நுரையீரலில் வரக்கூடிய புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் திராட்சைக்கு உண்டு. கர்ப்பிணிகள் திராட்சையை 23-வது வாரத்தில் இருந்து சாப்பிட்டுவந்தால், குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும். திராட்சையில் உள்ள ப்ரோஆந்தோசயனிடின் (Proanthocyanidin) ஆஸ்துமா பிரச்னையின் வீரியத்தைக் குறைக்கும்.
திராட்சையில் உள்ள பாலிபீனால் நுரையீரல், வாய், சுவாசப் பாதை, மூச்சுக்குழாய், கணையம் போன்ற இடங்களில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கும்.

மார்பகம் - ஆரஞ்சு

பெண்களின் மார்பக வடிவில் அமைந்திருக்கிறது ஆரஞ்சுப் பழம். சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் வகைப் பழங்களில் உள்ள லிமோனாட்ய்ட்ஸ் (Limonoids) புற்றுநோய் செல்களை வளரவிடாது. சிட்ரஸ் பழங்களில் தினமும் ஒன்றைச் சாப்பிட்டுவந்தால், புற்றுநோய்க்கான வாய்ப்பு குறையும். மார்பகச் செல்களின் ஆரோக்கியம் மேம்படும். வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதயத்தில் படிந்த கெட்ட கொழுப்புகளை அகற்றும். சுவாசம் தொடர்பான நோய்கள், சில வகைப் புற்றுநோய்கள், அல்சர், மூட்டுநோய், சிறுநீரகக் கற்கள் போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.
சிட்ரஸ் நிறைந்த பழங்களை இயற்கையான ஆன்டி-கார்சினோஜென் (Anti-carcinogen) எனச் சொல்லலாம். தினமும் சாப்பிட்டுவர, புற்றுநோய் வரும் ஆபத்துகள் முற்றிலுமாகத் தடுக்கப்படும்.

இதயம் - தக்காளி

சாம்பார், ரசம், புளிக்குழம்பு என நம்முடைய அன்றாட உணவுகளில் தக்காளிக்கு முக்கிய இடம் உண்டு. இனிப்பு மற்றும் புளிப்பு சுவைகொண்ட தக்காளியில் சத்துக்கள் ஏராளம். லைக்கோபீன் (Lycopene) என்ற நிறமிதான், தக்காளியின் சிவப்பு நிறத்துக்குக் காரணம். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து, இதயத்துக்கு நன்மை விளைவிக்கிறது. கெட்ட கொழுப்பு குறைவதால், தமனிகளில் (Arteries) அடைப்புகள் ஏற்படாது. லைக்கோபீன், சில வகை புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது. உணவில் தக்காளியை அதிக அளவில் சேர்த்துக்கொண்டவர்களின் இதயம் பலமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை சில ஆய்வுகள் ஊறுதிசெய்திருக்கின்றன. சிவப்பு நிறப் பழங்களையும் காய்களையும் சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியம் பெறும். இவற்றைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், இதயம் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது.

கணையம்   - சர்க்கரைவள்ளிக் கிழங்கு

ணையத்தின் வடிவத்தில் இருக்கும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு கெட்ட கொழுப்பைக் குறைக்கும். சர்க்கரை வள்ளிக்கிழங்கின் கிளைசெமிக் குறீயீட்டின் அளவு (ரத்தத்தில் சர்க்கரை சேரும் திறன்)  குறைவு. சர்க்கரை நோயாளிகள் இதை  அளவாகச் சாப்பிடலாம். சர்க்கரைவள்ளிக் கிழங்கு கணையத்தின் செயல்திறனைப் பாதுகாத்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள்வைக்க உதவுகிறது. மேலும், இதில் வைட்டமின் பி6 அதிக அளவில் உள்ளது. இது கணைய செல்கள் ஆரோக்கியமாக இருக்கவும், கணையப் புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கவும் உதவுகிறது.
சர்க்கரை நோயாளிகள் மா, பலா, வாழை, சீதா, சப்போட்டா, திராட்சை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பழச்சாறுகளைவிட பழமாகச் சாப்பிடுவது நல்லது.

வயிறு - இஞ்சி

யிற்றுக்கு நன்மை செய்யக்கூடிய உணவுகளில் முக்கியமானது இஞ்சி. செரிமான சக்திக்கு இஞ்சி உதவும் என்பதால், இஞ்சிதான் வயிற்றின் `நண்பேண்டா.' மலச்சிக்கல், வயிற்றுக்கோளாறு போன்ற பிரச்னைகளைச் சரிசெய்யும்.
சீரகம், சோம்பு, ஏலக்காய், புதினா போன்றவற்றில் குர்குமின் (Curcumin) நிறைந்துள்ளது. இவற்றைத் தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால், வயிற்றுக்கு நல்லது. கஷாயம், மூலிகை டீ போன்ற ஏதேனும் ஒரு திரவ உணவைச் சேர்த்துக்கொள்வது நன்மையைத் தரும்.
 
நிறையப் பேருக்கு அல்சர் பிரச்னை பாடாய்ப்படுத்தும். இவர்கள், 50 மி.லி அளவு இஞ்சி, சீரகம் போன்ற குர்குமின் சத்துக்கள் உள்ள உணவுகளைக்கொண்டு டீ தயாரித்து சாப்பிட்டால், வயிற்றுப் பிரச்னைகள் தீரும்.

சிறுநீரகம் - கிட்னி பீன்ஸ்
யர் தரமான புரதத்தை உள்ளடக்கி வைத்துள்ளது கிட்னி பீன்ஸ். கழிவுகளை உடலிருந்து வெளியேற்றும் வேலையைச் சிறுநீரகம் செய்கிறது. அதற்கு ஆதாரமான உயர் புரதம் கிட்னி பீன்ஸில் உள்ளது. சில வகை புரத உணவுகள் கொழுப்பைச் சேர்க்கும். அவை உடலுக்குக் கேடு. ஆனால், கிட்னி பீன்ஸில் உள்ள புரதம், நல்ல புரதம் என்பதால், கொழுப்பை உடலில் சேரவிடாது. அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளதால், சருமத்தின் பளபளப்பைக் கூட்டும். மலச்சிக்கலைப் போக்கும். இதயம் தொடர்பான பிரச்னைகள் மற்றும் மறதி நோயைச் சரிசெய்யும்.

கருமுட்டை (ஓவரி) - ஆலிவ்

ருமுட்டையின் வடிவத்தில் ஆலிவ் காய்கள் இருக்கின்றன. ஆலிவ்வில் உள்ள சத்துக்கள் எள், மஞ்சள் போன்ற நம் ஊர் உணவுகளிலும் நிறைந்துள்ளன. ஓலிக் (Olic) ஆசிட் நிறைந்தது ஆலிவ். நல்லெண்ணெய், தவிட்டு எண்ணெய், முட்டை, நட்ஸ், மீன் போன்றவற்றிலும் ஓலிக் ஆசிட் கிடைப்பதால், அவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இந்த உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டால், ஓவரியன் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்.
ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவுகளைச் சாப்பிடும் பழக்கத்தை அடிப்படையாக மாற்றிக்கொண்டாலே, கருமுட்டையின் வளர்ச்சி சீராக இருக்கும்.

கர்ப்பப்பை  - அவகேடோ

வகேடோவின் விதை அமைப்பு, கர்ப்பப் பையின் உள் வடிவம் போல இருக்கும். ஃபோலிக் சத்துக்களின் களஞ்சியமாக இருப்பதால், அவகேடோ சாப்பிடுவது கர்ப்பப்பைக்கு நல்லது. ஃபோலிக் சத்து நிறைந்துள்ள நம் நாட்டு காய்கறிகளும் உள்ளன.  இவற்றைச் சாப்பிட்டும் கர்ப்பப்பையைப் பலப்படுத்தலாம்.
இனப்பெருக்க உறுப்புகளுக்கு மிகவும் அவசியமான ஃபோலிக் ஆசிட் சத்து, கர்ப்பப்பை வாய் புற்றுநோய், புற்றுநோய் வருவதற்கு முந்தைய நிலையில் தோன்றும் சிக்கல்களைக் குறைக்கும். வாரம் ஒரு அவகேடோ சாப்பிட்டாலே ஃபோலிக் சத்துக்களின் தேவை பூர்த்தியாகும்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோயை வராமல் அழிக்கும் ஆற்றல் அவகேடோ பழத்துக்கு உண்டு. மேலும், உடல் எடை குறைந்த குழந்தைக்கு நல்ல ஆகாரம். இந்தப் பழத்தை, பழுத்த பிறகே சாப்பிடவேண்டும். காய், செங்காயைச் சாப்பிடக் கூடாது.

செல்கள் - வெங்காயம்